பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகள் – தமிழகத்தை சேர்ந்த கல்லூரி தேர்வு!
புதிய கல்விக் கொள்கையின் படி, நடப்பு கல்வியாண்டில் பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநில கல்லூரிகளுக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அனுமதி வழங்கி உள்ளது.
பொறியியல் படிப்புகள்:
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி, பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அதில் தமிழ் உள்ளிட்ட 11 பிராந்திய மொழிகளில் பாடங்களை அறிமுகம் செய்யவும் சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்நிலையில் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் விதத்தில் 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மீன்வள உதவியாளர் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 2 வரை விண்ணப்பம்!
இந்த ஆண்டு முதல் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி, பஞ்சாபி, ஒரியா, இந்தி ஆகிய 11 மொழிகளில் பி.டெக் பயிற்றுவிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்தி மொழியில்,உத்தரப் பிரதேசத்தில் 4, ராஜஸ்தானில் 2, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒரு கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல தமிழ், தெலுங்கு, மராத்தி மொழியில், தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்லூரிகளும், தேர்வு செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவினரின் ஒப்புதலின்படி, கணினி அறிவியல், எலெக்ட்ரானிக், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஐடி ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பொறியியல் படிப்புகள் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செங்குந்தர் பொறியியல் கல்லூரி, மெக்கானிக்கல், சிவில் பி.டெக் படிப்புகளை முழுக்க முழுக்க தமிழில் அளிக்க அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.