தமிழகத்தில் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு – ஆகஸ்ட் 29 முதல் துவக்கம்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் இன்னும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறவில்லை. இந்நிலையில் CBSE தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி பொது கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!
இந்நிலையில் கடந்த ஆண்டு பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு இந்த ஆண்டு நேரடியாக பிஇ, பி. டெக் இரண்டாம் ஆண்டு வகுப்புகளில் சேர இருக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கலந்தாய்வு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் 24ஆம் தேதி துவங்கி கடந்த 3 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29 ஆம் தேதி துவங்கி செப். 12 ஆம் தேதி வரைநடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் பழனி கூறுகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வித்துறை செயலாளர் தொழில்நுட்ப கல்வி துறை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 65 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 24,062 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் தகுதியுள்ள 20,574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை அவர்களுக்கான இணையதள கவுன்சலிங் விவரங்கள் www.tnlea.com என்ற முகவரியில் வெளியாகி இருக்கிறது. சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளிலும் பொது கலந்தாய்வு செப். 11 ஆம் தேதியும், பிஎஸ்சி மாணவர்களுக்கு 12 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது மேலும் விவரங்களுக்கு 9443661901 மற்றும் 9843153330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்