தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நாளை (ஆக. 20) முதல் தொடக்கம் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வு 4 கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில் நாளை (ஆகஸ்ட் 20) முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.
சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு:
தமிழக பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் பொது கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள இதுவரை 1.60 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அந்த வகையில் இந்த கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 20) தொடங்குகிறது. மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு நாளை முதலில் கலந்தாய்வு நடக்கிறது. அதன் படி அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த கலந்தாய்வு காலை 10 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்தல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இரவு 7 மணிக்கு உத்தேசம் ஒதுக்கீடு வழங்கப்படும். அதன் பின் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலையில் கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து 21 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் 201 மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 967, விளையாட்டு பிரிவு மாணவர்கள் 1,258 பேர் என மொத்தம் 2,426 பேர் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் நாளை (ஆக.20) மின்தடைக்கான பகுதிகள் – இதோ முழு List!
மேலும் சிறப்பு பிரிவினருக்கு 22 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்வது நிறைவு பெறுகிறது. 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு உத்தேச ஒதுக்கீடும், 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு கடிதமும் வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தொழிற்கல்வி படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் தொழிற்கல்வி பொது மாணவர்களுக்கும் 25 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதன் பின் பொதுப்பிரிவு கலந்தாய்வு 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல் சுற்று தொடங்கி 27 ஆம் தேதி மாலை 5 மணிவரை நடக்கிறது. மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வு அக்டோபர் 23 ஆம் தேதி நிறைவுபெறுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்