பொறியியல் கல்லூரிகளுக்கான முக்கிய அறிவிப்பு – ஏஐசிடிஇ வெளியீடு!!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அங்கீகாரத்தை புதுப்பிக்க கால அவகாசத்தை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கான அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் பெற வேண்டும். அதில் கல்லூரிகளில் உள்ள படிப்புகள், உள் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அங்கீகாரம் வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள 4000க்கு அதிகமான கல்லூரிகள் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – இன்று முக்கிய ஆலோசனை!!
மேலும் தமிழகத்தில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க உள்ளன. இதற்கான விண்ணப்பபதிவு மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இதற்கான கடைசி தேதி ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.