பொறியியல், டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் இந்த பொது முடக்கத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள கொரோனா அச்சத்தால் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட முடியாத சூழல் நிலவுகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் சி.என்.அஸ்வதா நாராயணன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விஸ்வேஸ்ராய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு – எம்எல்ஏ அறிவிப்பு!!
முன்னதாக இந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி நடத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா அரசு அறிவித்தபடி மே மாதம் 4 ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருப்பதால் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் மே 19 அன்று துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகுப்புகள் ஆன்லைன் வழியாகவோ, அல்லது நேரடி வகுப்புகளாகவோ நடத்தப்படுமா என எந்த அறிவிப்புகளும் இன்னும் வெளியாகவில்லை.