விரைவில் முடிய இருக்கும் ஜீ தமிழ் “என்றென்றும் புன்னகை” சீரியல் – வைரலாகும் இறுதி நாள் புகைப்படம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் “என்றென்றும் புன்னகை” சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பு காட்சிகள் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
என்றென்றும் புன்னகை சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்கள் அனைத்தும் குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்கள் தான் TRPயில் போட்டி போடுகின்றனர். விறுவிறுப்பு குறைவாக உள்ள சீரியல்களை இந்த சேனல் நிறுவனங்கள் முடித்துவிட்டு புது கன்டென்ட் உடன் சீரியல்களை தொடங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜீ தமிழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட “என்றென்றும் புன்னகை ” சீரியல் மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்தது.
திடீரென ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அருண் பாரதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
வழக்கமாக இருக்கும் கதையுடன் இல்லாமல் புது கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். நாயகன் ஆகாஷ் பாட்டி ஆண்டாள் மூலம் வளர்க்கப்படுகிறார். குடும்பத்தை வழிநடத்தும் வீட்டிலேயே மூத்தவரான ஆண்டாள் தனது பேரன் ஆகாஷுக்கு ஆர்ஜே தென்றலை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆகாஷ் பாட்டியின் சொல் கேட்டு நடப்பவர், முற்றிலும் சுயமாக எந்த முடிவும் எடுக்காதவர் என்பதை தென்றல் தெரிந்து கொள்கிறார். இதனிடையே தென்றல் தான் விரும்பும் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஆகாஷுக்கும் தென்றலின் முதல் தங்கையான நிலாவிற்கு திருமணம் நடக்கிறது.
Exams Daily Mobile App Download
தனது பேரனை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆண்டாள் தென்றலை பழிவாங்க நினைப்பது தான் கதை. ஆர்ஜே தென்றலாக நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் நடித்து வருகிறார். தொடக்கத்தில் சுவாரஸ்யமாக சென்றாலும் இப்போது அடுத்தகட்ட கதை இல்லாமல் இருப்பதால் தற்போது இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்பு புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.