தமிழகத்தில் இனி தொடர் மின்தடைகளுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிக புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை விரைவில் முடிக்கும் படி மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
மின்சாரம் துண்டிப்பு:
தமிழகத்தில் சில காலமாக பல மாவட்டங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டு வருகிறது. பல மணி நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, புகார்கள் எழுந்து வந்தது. இதனால் மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, மின் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், 24 மணி நேர மின் நிலையம் அமைக்கப்படுவதால் மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி, தற்போது தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் மக்கள் கோரிக்கை மனுக்கள் வரவேற்கப்பட்டு, அலுவலகத்தில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவன துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மண்டலத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பல்வேறு குறைகளை கேட்டு ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – eKYC அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
மேலும், மக்கள் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் கொடுத்தனர். பின்னர் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதன்பின், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், தாம்பரம் மாநகராட்சியில் வந்த 600-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகவும், இதில் பெரும்பாலான கோரிக்கைகள் மின்தடை குறித்து மட்டுமே இருப்பதால் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.