தமிழகத்தில் விரைவில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நன்கு பலன் அளிக்கிறது என்றும் மிக விரைவில் தமிழகத்தில் பரவும் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தற்போது தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்திய பலனாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற Club House செயலி – சமூக வலைதள பயன்பாடு!
அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மருத்துவர்கள் பணி நியமனம், பணியிட மாற்றம் ஆகியவை வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் என்றும் இதில் எந்த ஒரு முறைகேடுகளும் அரங்கேற வாய்ப்பில்லை என்றும் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த கொரோனா காலத்தில் தமிழகத்தில் மது கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தற்போது தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படும் மது கடைகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. தமிழக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நன்கு பலன் தருகிறது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று காட்டுக்குள் வருகிறது. தமிழகத்தில் மிக விரைவில் கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.