தமிழருக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!!
தமிழகத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனத்தில் வட மாநிலத்தவர்களே பணிபுரிந்து வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசு பணிகளில் பெரும்பாலானோர் வட மாநிலத்தவர்கள் பணி புரிந்து வந்தனர். தற்போது இதனை தடுக்கும் விதமாக போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக TNPSCயின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வில் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகே தேர்விற்குரிய அடுத்த பாடப்பகுதி மதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து தற்போது, தனியார் நிறுவனங்களிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை விட வட மாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிந்து வருகிறார்கள். அதனால் இதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து தற்போது தனியார் நிறுவனங்களில் தமிழருக்கு 80% வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்துள்ள சாம்சங் – 400 கோடி ரூபாய் முதலீடு!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாவது, தமிழகத்தில் தமிழருக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 80% விழுக்காடு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இச்சட்டத்தை வருகிற ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.