தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – 1.3.2022 கடைசி நாள்!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு - 1.3.2022 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு - 1.3.2022 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – 1.3.2022 கடைசி நாள்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுதாரர்கள் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிவிட்டார்கள். இவர்களுக்கு தற்போது ஒரு மாபெரும் வாய்ப்பை தமிழக அரசு தற்போது வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய 6 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறிவிட்டார்கள். அத்துடன் புதுப்பிக்க தவறியவர்களுக்கு எந்தவிதமான அரசு பணியில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இதனால் தமிழக அரசு புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக இவர்களுக்கு அரசு பணியிடங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

SBI வங்கியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

அத்துடன் இதனை புதுப்பிக்க இணையதளம் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ செய்ய முடியும். முதலில் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று புதுப்பிக்க வேண்டிருந்த நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்பம் போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியை பதிவு செய்ய 2001 ஆம் ஆண்டு ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்பட்டது.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புதிய காப்பீட்டு திட்டம்!

அனைத்து மாநிலங்களில் உள்ள பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு சாப்ட்வேர் உருவாக்கப்பட்டது. இந்த சாப்ட்வேர் எல்காட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக தங்களது பதிவை புதுப்பித்து கொள்ளவும் முடியும். அதன்படி புதுப்பிக்க தவறியவர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம் மூலமாக வருகிற 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விரைந்து புதுப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!