தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் 2014, 2015, 2016, 2017,2018,2019 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமாகும். பிறகு அதை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும் இல்லையெனில் அந்த பதிவு உபயோகமற்றதாகி விடும். உரிய காலக்கெடுவுக்குள் புதுப்பிப்பதன் மூலம் பதிவு முன்னுரிமை அடிப்படையில் அரசின் சில துறைகளில் பணி வழங்கப்படும். தற்போது 10 ம் வகுப்பு முதல் பள்ளிகளிலேயே மாணவர்கள் பதிவு செய்து விடுகின்றனர். அதன் பிறகு ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம். மேலும் அவ்வப்போது தங்களது கல்வித் தகுதி களையும் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.

IPL 2022 திருவிழா ஆரம்பம் – பிப்.12 இல் தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமானோர் தங்களின் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காமல் இருந்து வந்தனர். அதனால் அரசு வேலைவாய்ப்பு புதுப்பிக்க கடந்த வருடம் முதல் கால அவகாசம் அளித்து வந்தது. மேலும் இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டும் வந்தது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 2014, 2015, 2016, 2017,2018,2019 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post Office ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.13,74,000 ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் 2014 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரையிலான காலங்களில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு புதுப்பித்தல் நிலையின் படி அனைவரும் பதிவுகளை 2022 மார்ச் 1ம் தேதிக்குள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணையதளம் வாயிலாகவும் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்றோ புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!