தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – மீண்டும் ஒரு வாய்ப்பு!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு - மீண்டும் ஒரு வாய்ப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு - மீண்டும் ஒரு வாய்ப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – மீண்டும் ஒரு வாய்ப்பு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுதாரர்கள் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிவிடுகிறார்கள். இவர்களுக்கு தற்போது ஒரு மாபெரும் வாய்ப்பை தமிழக அரசு தற்போது வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய 6 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறி விடுகின்றனர். இதனால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு பணி கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பை பதிவுதாரர்களுக்கு வழங்க உள்ளது. அதன்படி புதுப்பிக்க தவறியவர்கள் வருகிற 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – யுஜிசி விளக்கம்!

முதலில் மாவட்ட வேலைவாயப்பு மையத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டிருந்தது. தற்போது அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப போன்ற தகுதியை பதிவு செய்ய 2001 ஆம் ஆண்டு ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்பட்டது. அனைத்து மாநிலங்களில் உள்ள பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு சாப்ட்வேர் உருவாக்கப்பட்டது. இந்த சாப்ட்வேர் எல்காட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக தங்களது பதிவு புதுப்பித்து கொள்ள முடியும்.

ஆதார் கார்டில் பெயர், முகவரி, மொபைல் எண் மொழி மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இதனை பதிவு செய்ய https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவினை புதுப்பித்து கொள்ள இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று புதுப்பித்து கொள்ளலாம் அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு புதுப்பித்தல் அரசு பணிகளை பெறலாம். எனவே தருமபுரி மாவட்டத்தினர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!