தமிழக 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, இன்னும் 2 நாள் தான் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு தொடர்பான பணிகள் அக்டோபர் 18ம் தேதி வரை நடக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் தாங்கள் படித்த அனைத்து கல்வித்தகுதியையும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை அரசு நியமிக்கும் போது பதிவு மூப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணி தேர்வு நடைபெறும். முன்னதாக மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
PF பயனாளர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் EPF & EPS நியமனம்!
இது தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று பெறும் நாள் அன்று பள்ளிக்கு எடுத்து வர வேண்டும். அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி மேற்கொள்ளப்படும்.
TN TRB 2,331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – நேர்முகத் தேர்வு நடத்த கோரிக்கை!
அக்டோபர் 18ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணிகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/ ல் சென்று வேலைவாய்ப்பு பதிவு பணிகளை மேற்கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.