TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.56,100 முதல் மாத சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கூட்டுறவு தணிக்கைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு பிப்.16ம் தேதி விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 01.07.2022 அன்றைய நிலவரப்படி 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு எம்.ஏ (கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.tnpsc.gov.in/Document/english/2022_02_AD_Cooperative%20Audit_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இப்பணிக்கு வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் 30ம் தேதி அன்று காலை தாள்-I மற்றும் மதியம் தாள்-II எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.