தமிழ்நாடு வழக்குத் துறையில் வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
தமிழகத்தில் வழக்குத் துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணி இடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வழக்குத் துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று நிலவரப்படி குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா பரவல் – முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!
அத்துடன் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி, BC / MBC / DC / SC / ST உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் பணியில் நியமிக்கப்படுவோருக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணத்தை இணைத்து The Advocate General of Tamil Nadu, High Court, Chennai-600 104 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் வருகிற 17 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.