தமிழக கூர்நோக்கு இல்லங்களில் வேலைவாய்ப்பு – செப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களுக்கு, ஆற்றுப்படுத்தல் சேவை வழங்க ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களுக்காக அவர்கள் கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் செய்த குற்றங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு சிறுவர், சிறுமியர்கள் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் விளையாட்டுகள் கற்று கொடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து யோகா, தியான பயிற்சிகள், நீதி நெறி கதை போன்றவைகளும் கற்று தரப்படுகிறது.
தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் புதிய சாதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இந்த கூர்நோக்கு இல்லங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணவும் அனுமதி வழங்கப்படுகிறது. கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் சிறார்களுக்கு அவசியமான ஒன்று உளவியல் சார்ந்த பயிற்சிகள். அது அவர்கள் குற்றங்களில் இருந்து மீண்டு நல்வழியில் செல்ல பேருதவியாக இருக்கும். எனவே தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களுக்கு, ஆற்றுப்படுத்தல் சேவை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்பணிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்தலில், முதுகலை பட்டம் பெற்ற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளவர்கள் ‘கண்காணிப்பாளர், அரசு கூர்நோக்கு இல்லம், 1094 – அவிநாசி சாலை, பாப்பநாயக்கன் பாளையம், கோவை – 641 037’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வாகும் நபர்களுக்கு, ஒரு வருகைக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.