பழனி கோவில் & கல்வி நிலையங்களில் வேலைவாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதனால் யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
பழனியில் வேலை:
தமிழகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு சில கும்பல் மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து பலர் காவல்துறையில் புகார் அளித்து வந்தனர். அரசு பணிகளில் சேர துடிக்கும் நபர்களை குறிவைத்து தொடர்ந்து அவர்களிடம் பேசி பணம் கொடுத்தால் அரசு பணி வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை பெற்றவுடன் ஓடி விடுகிறார்கள். இதை அறியாமல் பலரும் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அரசு பணிகளுக்கு உரிய அதிகாரிகளை சந்தித்து விதிமுறைகளின் படி விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
HCL நிறுவனத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜூலை 1 முதல் சம்பள உயர்வு!
ஆனாலும் ஏமாறும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டே தான் இருகிறார்கள். அரசு வேலைகள் மட்டுமல்ல தற்போதைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பணம் கையாடல் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை துறையில் வேலைவாய்ப்புகள் குறித்து செய்தித் தாள்களில் விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. இதை பயன்படுத்தி கோவில்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
புகழ்பெற்ற பழனி கோவில் மற்றும் அதன் சார்பு கல்லூரிகள், பள்ளிகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தர உதவி செய்வதாக கூறி ஒரு கும்பல் பலரிடம் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. எனவே யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பழனி கோவில் நிர்வாகம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதிகாரபூர்வமாக விரிவாக விளம்பரம் செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலை வேண்டி விண்ணப்பம் யாரிடம் கொடுக்க வேண்டும் ?
உறுதியாக வேலை கிடைக்குமா ?