தமிழக ரேஷன் கடைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – அரசின் நடைமுறைகள் வெளியீடு!
தமிழக ரேஷன் கடைகளில் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டு அதற்கான நடைமுறைகளையும் விளக்கியுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழக அரசின் பொது விநியோகத்திட்டம் மற்றும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் பெண்களை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணிக்கு நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பெண் ஊழியர்களை நியமிக்கும் போது சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ரேஷன் கடை பணி நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் செப்.10ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அந்த கடிதத்தில், ‘தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விற்பனையாளர்கள் பணி செய்து வருகின்றனர். இத்தகைய ரேஷன் கடைகளில் ஒரு கூடுதல் உதவியாளர் அல்லது கட்டுனரை நியமிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், இரண்டு நபர் பணிபுரிந்து வரும் ரேஷன் கடைகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்.
எம்எம் அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
ஒரு நபர் பணிபுரிந்து வரும் கடைகளில் மாற்றுத்திறனாளி ஊழியர்களை பணியமர்த்த கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் பெண் ஊழியர்களை பணியமர்த்தும் போது சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதன் கீழ், ஆண் ஊழியர்களுக்கு இணையாக பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். மேலும் பெண் ஊழியர்கள் பணிபுரியும் கட்டாயமாக ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.