டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 45,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 45,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 45,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 45,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் டாடா குழுமம், தற்போது தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை ஒன்றை நிறுவி ஐபோன் தயாரிப்பில் இறங்கி இருக்கிறது. மேலும் இந்த புதிய வர்த்தகத்தால் 45,000 பெண்களை டாடா நிறுவனம் வேலைக்கு அமர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா நிறுவனம்:

டாடா குழுமம் இந்தியாவில் உள்ள பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்று. இது 100க்கு மேற்பட்ட உலகின் முக்கிய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள தனது எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறது. அதில் தற்போது தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகளில் டாடா நிறுவனம் சார்பில் ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

இது குறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின் படி, டாடா நிறுவனம் இந்த புதிய உற்பத்தியை தொடங்குவதன் மூலம் 18-24 மாதங்களுக்குள் 45,000 பெண்களை டாடா வேலைக்கு அமர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தொழிற்சாலைகளில் ஏற்கனவே 10000 பெண்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5000 பெண்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருக்கின்றனர். மேலும் ஓசூர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு மாதம் ரூ.16,000 மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.

உஷார் மக்களே.. தமிழகத்தில் நாளை (03.11.2022) இந்த பகுதிகளில் Power cut!

Follow our Instagram for more Latest Updates

இந்த சம்பளம் தொழில்துறை சராசரியை விட 40% அதிகம் ஆகும். மேலும் பெண் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் வளாகத்திலேயே வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி வழங்கவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்வதற்காக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சியை அமைப்பதற்கு விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா நிறுவனம் ஐபோன் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் முடிவானால், ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாக டாடா நிறுவனம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!