தனியார் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – 47,920 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
இந்தியாவில் உள்ள நைனிடால் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
இந்தியாவில் வங்கி சேவை என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதனால் கடந்த மாதம் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பகுதி நேரமாக இயக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவும் நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வங்கிகள் இணையதளம் வாயிலாக பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறித்தியது. அதன் படி தற்போது வங்கி சார்ந்த பணிகள் ஆன்லைன் மூலம் எளிதாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் அண்மையில் 12 இந்திய பொதுத்துறை வங்கிகளில் 40, 000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பாங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, எஸ்பிஐ போன்ற வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து தனியார் வங்கிகளும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது தனியார் வங்கியான நைனிடால் கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
Post Office இல் ரூ.16 லட்சம் வரை வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம் – முழு விபரம் இதோ!
நைனிடால் வங்கியில் 50 கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகும். என்ற இணையதளம் வாயிலாக ரூ.1500 விண்ணப்ப கட்டணம் செலுத்தி பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 1,500 ரூபாய் செலுத்த வேண்டும். கிளார்க் பணியிடத்திற்கு மாத ஊதியமாக 17,900 – 47920 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.