மத்திய அரசு துறைகளில் 67,768 பேருக்கு வேலைவாய்ப்பு – SSC வெளியிட்ட முக்கிய தகவல்!

0
மத்திய அரசு துறைகளில் 67,768 பேருக்கு வேலைவாய்ப்பு - SSC வெளியிட்ட முக்கிய தகவல்!
மத்திய அரசு துறைகளில் 67,768 பேருக்கு வேலைவாய்ப்பு - SSC வெளியிட்ட முக்கிய தகவல்!
மத்திய அரசு துறைகளில் 67,768 பேருக்கு வேலைவாய்ப்பு – SSC வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் 42,000 பேர் பணி நியமனம் பெற உள்ளனர் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் தனது ட்விட்டர் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் மத்திய அரசு ‘அக்னிபாத்’ என்ற திட்டம் மூலமாக இளம் வயதினர் ராணுவத்தில் சேர்க்க வேண்டுமென்று புதிய வேலைவாய்ப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்பின்பு இவர்களில் 25% பேர் முப்படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அத்துடன் 75% பணியில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள். இவ்வாறு 4 வருடங்களுக்கு பிறகு வெளியேற்றப்படுவதால் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்று இளைஞர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் பல்வேறு அமைப்பினரும் இத்திட்டத்திற்கெதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு துறைகளில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து வகையான போட்டித்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழக தலைநகர் சென்னையில் குறைந்த பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் – மேயர் அதிரடி நடவடிக்கை!

இதனை தொடர்ந்து தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் ட்விட்டர் தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசால் வரும் காலங்களில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக பதிவிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 15,247 பதவிகளுக்கான பணி நியமன செய்யப்பட உள்ளனர். அத்துடன் 42,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் அரசு துறைகளில் உள்ள 67,768 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!