சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜூலை 14 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளில் காலியாக இருக்கும் 400 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 27 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
மேலும் இது தொடர்பாக விமானநிலைய அதிகாரி கூறியதாவது, தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஏடிசி எனும் விமானநிலைய கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள ஜூனியர் எக்ஸிகியூடிவ் பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக இந்திய விமானநிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இத்தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் என 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.aai.aero என்ற இணையதள முகவரிக்கு சென்று வருகிற 15ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவு மேற்கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி, வயது வரம்பு, ஊதியம், பயிற்சி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் விமான துறையில் பணி புரிய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.