Wipro நிறுவனத்தில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு – வெளிநாடு செல்லும் வாய்ப்பு! முழு விவரம் இதோ!
விப்ரோ நிறுவனம் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் சுமார் 250 ஊழியர்களை நார்வேயில் உள்ள தனது அலுவலகத்தில் பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்பு:
பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் 2வது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நார்வேயில் சுமார் 265 ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நார்வேயில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியமர்த்தலின் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்றால் அதிக உள்ளூர் தொடர்பை வழங்கும் நீண்டகால நலனுக்கான முதலீடு என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த திட்டம் உள்ளூர் வாடிக்கையாளர்களின் நீண்டகால நலனுக்கான முதலீடாகும் என விப்ரோவின் பரிமாற்றத்தாக்கல் கூறுகிறது. இப்போது நார்வேயில் 95% பணியாளர்களைக் கொண்டுள்ள விப்ரோ, அதன் புதிய வளர்ச்சிக் கட்டத்தில் இதே மட்டத்தில் தொடர்ந்து இருக்கத் தீர்மானித்துள்ளது. இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஃபிராக் கூறுகையில், ‘அதிகரித்த உள்ளூர் முதலீடு எங்கள் புதிய இயக்க மாதிரியின் ஒரு பகுதியாகும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
இது நோர்டிக்ஸ் ஐரோப்பாவில் உள்ள மூலோபாய சந்தை அலகுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, பிராந்தியத்தில் உள்ள வணிகங்களுக்கு ஒரு கண்டுபிடிப்பு பங்காளியாக எங்களை நிலைநிறுத்திக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும், உள்ளூர் தேவை மற்றும் அதற்கான செயல்பாடுகளை போதிய மட்டும் வளர்த்து நார்வேயில் ஆற்றல் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளை, அதாவது கிளவுட் சேவைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு துறைகளில் முதன்மையாக வளர விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.