OLA நிறுவனத்தில் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – CEO அறிவிப்பு!
தமிழகத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா மின்சார வாகனங்கள் தயாரிப்பு ஆலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட இருப்பதாக இந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள ஓலா நிறுவனம், தனது நிறுவனத்தில் பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களை பணியில் அமர்த்த ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓலா எலக்ட்ரிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையில் இப்பணியமர்த்தல் உருவாக்கப்பட இருக்கிறது.
செப்.21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் முழுமையாக பெண்களை கொண்டு செயல்படும் நிறுவனமாக ஓலா அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது முதல்கட்டமாக 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 20 லட்சமாக உயரும் என தெரிகிறது. இதை தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு ஆண்டுக்கு 1 கோடி மின்சார வாகனங்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக ஓலா மாறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை – வெற்றி கண்டுள்ள வடகொரியா!
இது தொடர்பாக ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறுகையில், ‘பெண்களின் பொருளாதார வாய்ப்புகளை உயர்த்தும் நோக்கத்தில் இவ்வகை செயல்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த பொருளாதார வாய்ப்பு பெண்களின் குடும்பத்தை மட்டும் அல்ல சமூகத்தையும் மேம்படுத்தும். அதனால் வாகன தயாரிப்பு குறித்த முழு பயிற்சியும் பெண்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பு பொறுப்பு முழுவதும் பெண்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதற்காக பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.