தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு பயன்பெறும் வகையில் விழுப்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் படித்த பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படாமல் இருந்தனர். அதனால் படித்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் கொரோனா அச்சம் குறைந்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன . தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையில்லா திண்டாடத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. தனி மனிதர்களுக்கு வேலை என்பது அத்தியாவசிய தேவை ஒன்று. அது இல்லை என்றால் மனிதர்களின் நிலை மிக மோசமாகி விடும்.
Infosys நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – ராஜினாமா செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன்களை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு பெறுவது மற்றும் அதன் தொடர்பாக தமிழக அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும் வேலை வாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்கு மாதிரி வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்திற்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
விழுப்புரம் மாவட்டத்தில் ஏப்ரல் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்தமான வேலைகள் தேர்ந்தெடுத்து பயன்பெறலாம். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம்.