தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 12) வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தின் ஒவ்வொரு முக்கிய மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்டம்பர் 12) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு பல இளைஞர்களும் தங்களது வேலைகளை இழந்து தவித்து வந்தனர். இதன் காரணமாக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் இதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தொழில் பழகுநருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் திறன் பயிற்சி அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 அளவில் துவங்கி விடும் என்றும் 4 மணி அளவில் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Post Officeல் 37 லட்சம் வரை ரிட்டன்ஸ் தரும் சிறப்பு திட்டம் – முழு விவரம் இதோ!
இந்த முகாமில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கு பெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள கல்வி தகுதியாக ITI தேர்ச்சி பெற்றோர் அல்லது தோல்வி அடைந்தோர் (NTC/SCVT/COE) எட்டாம் வகுப்பு, SSLC மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அல்லது தோல்வி அடைந்தோர் என்று அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு அதிகபட்சமாக 40 வயது வரை இருத்தல் வேண்டும். அதே போல பெண்களுக்கு எந்த வித வயது வரம்பும் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு 04162290348 என்ற தொலைபேசி எண்ணை தொடர்ந்து கொள்ளலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் வேல்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு செல்ல தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றின் நகல்களை எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்,
பெங்களூரு மெயின் ரோடு,
அப்துல்லாபுரம்,
வேலூர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்