தமிழகத்தில் அக்.31ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனம் பங்கேற்பு!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அக்.31ம் தேதி பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுடைய வேலை நாடுநர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வாரந்தோறும் அல்லது ஒரு மாதத்தில் இரு வாரங்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம்கள் மூலம் ஏராளமான இளைஞர்கள் தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பணி நியமனம் பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமானது வரும் அக்.31ம் தேதி அன்று நடைபெறும். இதில் அண்மையில் அதாவது 2022 ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Bank : FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் கலந்து கொள்ள விரும்புபவர்களின் வயது வரம்பு 18 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். அத்துடன் முகாமிற்கு வரும் போது தங்களின் கல்வி தகுதி சான்றிதழ், ஆதார் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0424-2-275860 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.