அக்.29 பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
அக்.29 பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அக்.29 பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அக்.29 பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்கவுள்ளது. இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியது. இதனால் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வந்தனர். அன்றாட வாழ்க்கையை நடத்துவது சாமானிய மக்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்ததது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் தொற்று குறைய ஆரம்பித்த போது மீண்டும் மக்கள் வேலைகளுக்கு செல்ல தொடங்கினர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்க தொடங்கியதால் மக்கள் மீண்டும் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – காலக்கெடு முடிந்தவர்களிடம் அபராத வட்டி வசூல்!

அதன் பிறகு தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா குறைந்து வருவதால் அரசு மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் வேலை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நேரத்தில் அரசு தளர்வுகளின் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக அரசு பணியில் புதிதாக சேர்பவர்களுக்கு நற்செய்தி – இனி சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி!

இந்த முகாமில் 10, 12 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதி உடைய ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 29ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!