திருப்பத்தூரில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 70க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் தொடர்ந்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் நவ.27ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தனியார் வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் நவ.27ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக , நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது.
IPL 2022 சென்னையில் ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்? ரசிகர்கள் உற்சாகம்! 2 புதிய அணிகள் சேர்ப்பு!
இந்த முகாமில் 70க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தகுதியான ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதனால் 8ம் வகுப்பு படித்த முதல் பட்டப்படிப்பு வரை, தொழிற்கல்வி படித்துள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை!
இந்த முகாமில் கலந்துகொள்ள தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதி திருப்பத்தூர் தூய்நெஞ்சக் கல்லூரிக்கு நேரில் சென்று பயன்பெறலாம். மேலும் நேர்காணலுக்கு செல்லும் வேலை தேடும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறியுள்ளார்.