தமிழகத்தில் மார்ச் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் ஏராளமான வேலையில்லா இளைஞர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு வருகிற 26ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலையில்லா இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பும் அவ்வப்போது அதிகளவில் வெளியாகி வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வருகிற மார்ச் 26ம் தேதி அன்று தனியாா் துறைகள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படுகிறது
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ரூ.49420 சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
இம்முகாம் சேலம் ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம். அத்துடன் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். அத்துடன் இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.
மேலும் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளது. அத்துடன் வேலையளிக்கு விருப்பமுள்ள நிறுவனங்களும், வேலைநாடுநா்களும் இணையத்தளத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலையில்லா இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கு ஏற்ப வேலைகளை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் 0427 – 2401750 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.