தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – வேலையில்லாதோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் நடைபெறவுள்ளது. வருகிற ஜூன் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாக கொரோனா காரணமாக எந்த ஒரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படாமல் இருந்தனர். இதனால் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்தோர் அன்னவரும் மீண்டும் வேலையை தேடி அலைகின்றனர். தற்போது இந்த வருடம் கொரோனா அச்சம் குறைந்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையில்லா திண்டாடத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமனம் செய்து வேலை வழங்கப்பட உள்ளதாக தகவலை தெரிவித்துள்ளனர். இந்த முகாமிற்கு ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சுய விவர குறிப்பு ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
ஜூன் 8ம் தேதி பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி, வருகிற 10-ந் தேதி கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெறத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10ம் வகுப்பு ,12ம் வகுப்பு , ஐடிஐ , டிப்ளமோ, பட்டப்படிப்பு ,ஏ.என்.எம், ஜி.என்.எம், டிப்ளமா நர்சிங், பி.இ படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளது. முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்கள் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.