தமிழகத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்பற்றவர்களுக்கு உதவும் வகையில் ஆகஸ்ட் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் ஒவ்வொரு துறை சார்ந்த போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் குரூப் 2,2A தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. அரசுத்துறையை தொடர்ந்து தனியார் துறையும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளது. தற்போது கொரோனா தாக்கத்திற்கு பிறகு அவ்வப்போது அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பரமபத்தி வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் படி இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் , பெண்கள் என இருபாலரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதியதாக 500 மின்சார பேருந்துகள்? சோதனைகள் தீவிரம்!
Exams Daily Mobile App Download
முகமானது ஆகஸ்ட் 23ம் தேதி அன்று வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம்மில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை அலுவலகத்தின் 04286 – 281131 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்