தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 22 முகாம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 22 முகாம் அறிவிப்பு!
தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 22 முகாம் அறிவிப்பு!
தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 22 முகாம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஏப்ரல் 22) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற வருட இறுதியில் தமிழகத்தில் நிலவி வந்த ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவித்தனர். தற்போது தான் தமிழகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துள்ளது. மேலும் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருட துவக்கத்தில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளையும் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியையும் அறிவித்தது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் அறிவிப்பு – இனி ஒரு குடும்பத்துக்கு 2 லட்டு தான்!

தமிழக அரசு தங்களது சார்பில் பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அறிவித்து இருந்தாலும் மாநிலத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்களும் தங்களின் தரப்பில் இருந்து வேலை வாய்ப்புகளை வாரி வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அம்மாவட்ட அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த முகாம் முழுவதுமாக இலவசமாக நடைபெறுகிறது.

ExamsDaily Mobile App Download

 

மேலும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேலாளர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையான கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர், பிளஸ்-2, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ முடித்த ஆண், பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!