திருநெல்வேலியில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிறிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடந்த உள்ள சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 24 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் பலரும் வேலை இல்லாமல் திண்டாடி வரும் நிலையில், இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.
தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு – டிச.24ம் தேதி நேர்காணல்!
இந்த முகாமில் பங்குபெற விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அரசின் தனியார் வேலைவாய்ப்பு என்ற இணையத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். மேலும் நேரில் வரவுள்ளவர்கள் கல்வி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். இது தொடர்பான பல விவரங்களை அறியவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் அரசின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் சென்று பார்த்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது – வெளியான தகவல்!
இந்த முகாமின் மூலம் தங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட பிறகு உங்களின் வேலைவாய்ப்பு பதிவு பின் தள்ளப்படாது. மேலும் முக்கியமாக முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.