திருச்சியில் நாளை (நவ.26) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் நாளை திருச்சி மாவட்டத்தில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த தனியார் துறைகள் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
வேலைவாய்ப்பு முகாம்
கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல்வேறு இழப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றன. குறிப்பாக பல மக்கள் தங்களின் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தப்பட்டு வேலைகளை வழங்கி வருகின்றன. மேலும் நாளை தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னையில் நாளை மறுநாள் (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டபடிப்பு முடித்தவர்கள் பங்கு பெறலாம். மேலும் அவர்களின் வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவார்கள் தங்களின் கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிவரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் பங்கு பெற வேண்டும். இந்த முகாம் திருச்சியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
மதுரை, தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் நாளை (நவ.26) பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்த முகாமில் பங்கு பெற விரும்புவோர் 26.11.2021 அன்று காலை 10.30 மணி அளவில் திருச்சியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரில் வருகை புரிந்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவிக்கிறார். அத்துடன் ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தயாராக உள்ளன. இதனால் வேலையில்லா பட்டதாரிகள் பங்கு பெற்று பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்