தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
சேலம் மாவட்டத்தில் வேலை வாய்பற்றவர்களுக்கு உதவும் வகையில் நாளை (06.05.2022) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாகவும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முகாமானது சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 6ம் தேதி காலை மணிக்கு தொடங்குகிறது.
தமிழக அரசு முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு – CEO வெளியிட்ட முக்கிய தகவல்!
8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி தகுதி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற கல்வித்தகுதிகள் பெற்றவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. வேலை வாய்ப்புகளை தேடி வருபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.