தமிழகத்தில் வரும் 7ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பை பெறுவது அனைவருக்கும் சவாலான விஷயமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர் அதிகம் வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது. மேலும் இதை தடுக்கும் விதமாகவும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் நீட் தேர்வு 2022 ஒத்திவைப்பு? வலுக்கும் போராட்டம்!
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், வேலை தேடும் இளைஞா்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு நோ்வாக மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
முதல் கட்டமாக, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், டா்னா், பிட்டா் மற்றும் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை முகாமில் நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.மேலும் முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களுடைய சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 – 237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.