தமிழகத்தில் 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – டிச.18 வேலைவாய்ப்பு முகாம்!
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் பங்குபெற்று வேலைவாய்ப்பினை பெற்று கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம்
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு இழப்புகளை பொது மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. அதன் மூலமாக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. மேலும் நாளை தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற டிச.18-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த மாபெரும் முகமானது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்றவை இணைந்து நடத்துகிறது. அத்துடன் இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் 18 வயது முதல் 45 வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
SBI வங்கியில் 1,226 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
மேலும் இம்முகாமில் பங்கு பெறுபவர்கள் 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி பெற்றவர்கள் வரை, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் போன்ற கல்வி தகுதி உடையவராக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து முகாமிற்கு வருகை தரும் அனைவரும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கு பெற வேண்டும். அத்துடன் கிருஷ்ணகிரி, ஓசூா், சென்னை, சேலம் போன்ற நகரங்களில் இருந்து வரும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணியிடங்களை நிரப்ப தயாராக உள்ளனர்.