கூடலூரில் டிச.7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!

0
கூடலூரில் டிச.7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க!
கூடலூரில் டிச.7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க!
கூடலூரில் டிச.7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பல பேர் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா?

இந்த முகாம் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்தியாவில் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!

மேலும் முகாமில் கலந்து கொள்பவர் 18 முதல் 40 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். அத்துடன் இந்த முகாமில் கலந்து கொள்ள படிக்காத மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் ஐடிஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் போன்ற அனைத்து விதமான தகுதியுடையவர்களும் பங்கு பெறலாம். இதனை தொடர்ந்து வேலையில்லா ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு மாபெரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!