தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் – முதல்வர் வலியுறுத்தல்!
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தனியார் துறைகள் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட முதல்வர் அமைச்சரிடம் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டில் கொரோனாவால் ஏராளமானோர் வேலையிழந்து தவித்து வந்தனர். இவர்களை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில் அவ்வபோது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அந்த வகையில் நேற்று சென்னையில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் 234 தொகுதிகளிலும் இது போன்ற முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
Exams Daily Mobile App Download
மேலும் உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உங்களுக்கு கிடைக்கும் என்றும் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைப்பது மட்டுமல்ல சுமார் 1 லட்சம் பேருக்கு பணி ஆணைகளை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை விட ஒரு முதல்வருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது என்று கூறி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்