தமிழகத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. ஆனாலும் கல்வித்துறை மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விட கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டது.
Exams Daily Mobile App Download
சென்ற வருடம் பொதுத் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அரசு சார்பிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC சார்பில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4, VAO தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இது தவிர பல தனியார் அமைப்புகளும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 29 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டிய விவரங்கள், இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் கீழே வரும் பணியிடங்களுக்கு ஆட்களை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இந்த பணியிடங்கள், மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேனேஜர், டீம் லீடர் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் இதற்கு தகுதி உள்ளவர்கள் அவர்களின் கல்வி சான்றிதலுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.