இந்தியாவில் மீண்டு வரும் வேலைவாய்ப்புகள் & ஊதிய உயர்வு – கணக்கெடுப்பு தரவு தகவல்!

0
இந்தியாவில் மீண்டு வரும் வேலைவாய்ப்புகள் & ஊதிய உயர்வு - கணக்கெடுப்பு தரவு தகவல்!
இந்தியாவில் மீண்டு வரும் வேலைவாய்ப்புகள் & ஊதிய உயர்வு - கணக்கெடுப்பு தரவு தகவல்!
இந்தியாவில் மீண்டு வரும் வேலைவாய்ப்புகள் & ஊதிய உயர்வு – கணக்கெடுப்பு தரவு தகவல்!

இந்தியாவில் கொரோனா பேரலை காரணமாக இழந்த வேலை வாய்ப்புகள், சம்பள இழப்புகள் தற்போது மீண்டுமாக உயர்ந்து வருவதாக அரசின் கணக்கெடுப்பு விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்று நோய் மக்களின் வாழ்வாதாரம் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாது ஒன்று. அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்த கொரோனா பரவலால் நாடு தழுவிய முழு முடக்கம் விதிக்கப்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. இது வேலை இழப்பு, பணி நீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புகளுக்கும் வழிவகுத்தது.

பெண்களின் திருமணத்திற்கு உகந்த LIC பாலிசி – ரூ.27 லட்சம் வரை பெறலாம்!

அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் அகில இந்திய காலாண்டு நிறுவன அடிப்படையிலான வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு மார்ச் 25 மற்றும் ஜூன் 30க்கு இடையில், குறைந்தது 27% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. மேலும் 9 துறைகளில் குறைந்தபட்சம் 19% ஊழியர்கள் முழு சம்பளத்தைப் பெறவில்லை என்பதையும் ஆய்வு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மறுபுறம், கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம் 29% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர அறிக்கையின்படி, IT, BPO, சுகாதாரம், போக்குவரத்து, நிதிச் சேவைகள், கட்டுமானம், கல்வி மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் நன்கு முன்னேறியுள்ளது. இதில் குறிப்பாக IT மற்றும் BPO துறைகள் சுமார் 152% வளர்ச்சியைக் கண்டது. அதே நேரத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் முறையே 77 மற்றும் 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பெண் தொழிலாளர்களின் விகிதம் 31% லிருந்து 29% ஆக குறைந்துவிட்டதால், அந்த விகிதம் சற்று சரிவடைந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இருப்பினும், கொரோனா தொடர்புடைய வேலைவாய்ப்பு சவால்களை சந்தித்த பிறகு, இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்புகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக TCS, இன்போசிஸ், விப்ரோ மற்றும் HCL டெக்னாலஜிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு சந்தையில் முக்கிய வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா ஊரடங்கு காலங்களில் 31% லிருந்து 29% ஆக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!