தமிழகத்தில் நாளை (டிச.10) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாளை (10.12.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதனால் வேலை நாடுநர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்று பயன்பெறலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. வழக்கமாக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும். இந்த கொரோனா தாக்கத்தால் அவை ரத்து செய்யப்பட்டது.
புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
தற்போது அரசு ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நாளை (10.12. 2021) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பிற மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் நேரடியாக வந்து தகுதியுள்ளவா்களை நேர்காணல் மூலம் தோ்வு செய்ய உள்ளனா்.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இதில் 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமானது நாளை காலை 10 மணிக்கு, நாகர்கோவில் கோணம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. வேலை தேடுபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.