PF கணக்கில்.. இனி 6 மாதத்திற்குள்ளான பலன்களையும் பெறலாம்…வெளியாக இருக்கும் சூப்பர் அறிவிப்பு!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் EPFO பயனாளிகளுக்கு ஒரு மகிழ்சசியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பயனாளிகள் கவனத்திற்கு:
இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட பல வகையான பலன்களை வழங்கி வருகிறது. இதையடுத்து EPFO நிறுவனத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி PF கணக்கின் கீழ் பிடித்தம் செய்யப்படும். அதாவது EPFO நிறுவனத்தின் கீழ் பயன்பெற PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்த நிலையில் மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற 232வது கூட்டம் ஒன்று நடைபெற்றது.
Follow our Instagram for more Latest Updates
இந்த கூட்டத்தில் EPFOன் மத்திய அறங்காவலர் குழு கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF தொடர்பாக சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதில் குறிப்பாக EPS-95 திட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, PF திட்டத்தின் கீழ் இருக்கும் பணியாளர்கள் 6 மாதத்திற்குள் பணியை விட்டு விலகினாலும் அவர்களின் PF தொகையை திரும்ப பெறலாம் என கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி? மீண்டும் வெடித்த பிரச்சனை – அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
மேலும் 34 ஆண்டுகளுக்கும் மேலாக PF சந்தாரர்கள் இத்திட்டத்தில் இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வகுத்துள்ளது. அதன்படி இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.