அட்ராசக்க…ஓய்வூதியதாரர்களுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி – பென்ஷன் தொகை அதிரடி உயர்வு!!
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகப்படுத்த உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியம்
கொரோனா காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow our Instagram for more Latest Updates
தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.21 ஆயிரம் ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளமாக ரூ. 15,000 உள்ளது. இதில் EPS கணக்கில் 1250 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி இந்த குறைந்தபட்ச வரம்பை அதிகரிக்கும் போது EPS கணக்கில் பிடித்தம் செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும். அதாவது ரூ. 21,000 என அதிகரிக்கப்பட்டால் EPS கணக்கில் ரூ. 1749 பிடித்தம் செய்யப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது 20 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.7286 வழங்கப்பட்டு வருகிறது.