நீண்ட விடுப்பில் ஊழியர்கள் – சிக்கலில் கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனம்!
கொரோனா தொற்று காலத்தில் குறைக்கப்பட்ட சம்பளங்களை மீட்க கோரி கோ ஃபர்ஸ்ட், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்களின் ஊழியர்கள் நீண்ட விடுப்பில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீண்ட விடுப்பு:
மஹாராஷ்டிராவின் மும்பையை தளமாகக் கொண்ட இந்திய விமான சேவை நிறுவனம் கோ ஃபர்ஸ்ட். இது நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பயணங்களை மேற்கொள்ளும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் வாடியா குழுமத்திற்கு சொந்தமான இந்த கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஊதியம் கிடைக்காததால் அவர்கள் அதிக நோய்வாய்ப்பட்ட விடுப்பில் அதாவது நீண்ட கால விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விமான நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை தற்போது மறுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் விமான நிறுவனம் தனது ஊழியர்களுடன் அவ்வப்போது தொடர்பு கொள்வதாகவும், தற்போதைய நிலைமையை கேட்டு தெரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தொழில்நுட்ப வல்லுனர்களிடம் இருந்து பொதுவான எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆனால், சில தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 முதல் 3 நாட்களாக பணிக்கு வரவில்லை. நாங்கள் எங்கள் ஊழியர்களுடன் தொடர்ந்து விவாதித்து தற்போதைய நிலைமையை விளக்கி உரையாற்றுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1 லட்சம் அரிசி அலைகள் அடைப்பு? இதற்காக தான்!
இதற்கிடையில், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றும் இதனால் கடந்த ஐந்து நாட்களில் விமான பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்களில் சிலர் தங்களின் குறைந்த சம்பளத்திற்கு எதிராகவும், கொரோனா தொற்று நோய்களின் போது குறைக்கப்பட்ட சம்பளத்தை மீட்டெடுக்கக் கோரியும் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த பிரச்சனை இண்டிகோ விமான நிறுவனத்திற்கும் நடந்ததாக சொல்லப்படுகிறது.