தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – EMIS இணையதளம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பதிவேற்றும் இணையதளமான EMIS ல் ஆசிரியர்கள் கண்டிப்பாக மொபைல் மூலமாக பணி செய்யக்கூடாது என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
EMIS இணையதளம்:
தமிழகத்தில் 2020-2021 ஆண்டு கல்வி அமர்வு முடிவடைந்து, 2021 – 2022 புதிய கல்வி அமர்வு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை மற்றும் இது போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் பணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
இரவு 9 மணிவரை உணவகங்கள் திறக்க அனுமதி – அரசுக்கு கோரிக்கை!
இந்நிலையில், தமிழக கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்குவதால் பள்ளி மாற நினைக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வேண்டி பள்ளிகளில் கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் பள்ளி மாணவருக்கான மாற்றுச் சான்றிதழை அளிக்கும். வேறு பள்ளியில் இந்த மாற்றுச் சான்றிதழின் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
TN Job “FB Group” Join Now
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மாற்றுச் சான்றிதழ் தயாரிக்கும் பணிகள் EMIS இணையத்தளம் மூலமாக நடைபெறுகிறது. ஆசிரியர்கள் இந்த பணிகளை மேசைக்கணினி மற்றும் மடிக்கணினி மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மொபைல் போன் வழியாக இந்த பணிகளை செய்யக்கூடாது என்றும் இந்த இணையதளத்திற்கு மொபைல் வியூ உருவாகவில்லை. மேலும், தொடு வேகம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் தகவலை உள்ளிடும் பொது தவறுகள் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.