ஆகஸ்ட் 2 முதல் 31 வரை அவசர நிலை அறிவிப்பு – ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா!
ஜப்பான் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 2020ம் ஆண்டு 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்புகள் அதிக அளவில் இருந்ததால் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 2021 ம் ஆண்டு கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், தீவிர கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை – மகிழ்ச்சி அறிவிப்பு!
இந்நிலையில் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 8ம் தேதி வரை போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் ஜப்பான் அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேலும் வழிமுறைகளை தேடி வருகிறது. இதனால் ஜப்பானின் சைதமா, கனகவா, சிபா, ஒசாகா ஆகிய 4 நகரங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை அவசர நிலை கடைபிடிக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் சுகா அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் டோக்கியோ நகரில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டோக்கியோ மற்றும் மேற்கு நகர பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் தொற்று அதிக வேகத்தில் பரவுவதாக பிரதமர் தெரிவித்தார். இதனால் ஜப்பானின் மருத்துவ கட்டமைப்புகள் குறைந்து விடும் நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து டோக்கியோவை சுற்றியுள்ள 5 நகரங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.