வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகரம் .. அவரச உதவி எண்கள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதற்காக சென்னை கார்பரேஷன் மக்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது.
உதவி எண்கள்:
நவம்பர் மாத தொடக்கம் முதல் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கனமழை பெய்ய இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும், சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை திட கழிவுகளால் அடைக்கப்பட்டு தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் சென்னை முழுவதும் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பரவும் போலி தகவல்! இதனை நம்ப வேண்டாம்.. ஆபத்து!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கனமழையில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரச கால உதவிகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள 044-25619206, 044- 25619207, 044-25619208 ஆகிய தொலைபேசி எண்களையும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.