அமெரிக்க செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்தியர்களுக்கு நடப்பு ஆண்டு அதிக எண்ணிக்கையில் விசா ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது. மேலும் விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களின் காத்திருப்பு காலம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விசா:
இந்தியாவிலிருந்து ஏராளமானோர் தொழில், கல்வி உள்ளிட்ட பல நோக்கங்களுக்காக அமெரிக்கா செல்ல விசா வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அமெரிக்க விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 8 லட்சம் பேருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் கிளர்க் தேர்வு திடீரென ஒத்திவைப்பு – வினாத்தாள் கசிவு விவகாரம்.. காவல்துறை நடவடிக்கை!
மேலும் கடந்த ஆண்டு வெளியான தகவலின் படி அமெரிக்கா விசா பெறுவதில் மெக்சிகோவை தொடர்ந்து இந்தியா முன்னேறியுள்ளது. அமெரிக்க விசா பெறுவதில் 2023 ஆம் ஆண்டில் இந்தியா 2 – ம் இடத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க தூதரகம் நடப்பாண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விசா வழங்க முடிவு செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி, அதிக எண்ணிக்கையில் அமெரிக்க விசாவுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உள்ளோம். மேலும் சனிக்கிழமைகளிலும் தூதரக அலுவலகங்களைத் திறந்து பணியை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் காத்திருப்பு காலம் குறையும் என்றும் கூறியுள்ளார்.